தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலைகளில் அடுத்தபடியாக ரஜினியிடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், ‛ஜெய்பீம்' ஞானவேல் உள்ளிட்ட பலர் கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி தேர்வு செய்துவிட்டாராம். அதாவது ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும், அடுத்தபடியாக அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.