திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாள நடிகையான பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தார். 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். கன்னட படங்களிலும் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பிரச்னையால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட பாவனா, தற்போது மலையாள படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதோடு தமிழுக்கும் வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அவர் கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக நடிக்கிறார், ஜெய்தேவ் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹாரர் த்ரில்லர் ஜார்னரில் இந்த படம் தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கிறது. கணேஷ் வெங்கட்ராம், பாவனா தொடர்பான காட்சிகள் படமாகி வருகிறது.