இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
2023ம் ஆண்டு இரண்டு பெரிய நடிகர்களான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்கள் தியேட்டர்களுக்குக் கொஞ்சம் தெம்பைத் தந்தன. எப்படியோ இரண்டு வாரங்களாவது அந்தப் படங்களை வைத்து ஓட்டிவிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி வெளியான ஆறு படங்கள் தியேட்டர்களை நிறையவே தடுமாற வைத்துள்ளன.
அதில் சில படங்களுக்கு படம் வெளியான முதல் நாளே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராமல் 'ஷோ பிரேக்' ஏற்பட்டுள்ளது. 'ரன் பேபி ரன்' மட்டும் சில நாட்களுக்கு கொஞ்சம் ரசிகர்களை வரழைத்துள்ளது. மற்ற படங்கள் நிலை நிறையவே மோசம் என்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க எந்த ஒரு திட்டமும் அந்தப் படங்களைத் தயாரித்த நிறுவனங்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம் என தியேட்டர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு மாநகரங்களிலேயே பல தியேட்டர்களில் அந்தப் படங்களுக்கு ஷோ பிரேக் நடந்துள்ளது என அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்கள். இன்று பிப்ரவரி 10ம் தேதி “டாடா, கொடை, கூட்டம், நினைவே நீ, வர்ணாஸ்ரமம், வசந்த முல்லை” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் எதற்குக் கொஞ்சமாவது கூட்டம் வரும் எதற்கு ஷோ பிரேக் வரும் என்ற ஒரு அதிர்ச்சியிலேயே தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.
சிறிய பட்ஜெட் படங்களை ஓட்ட சிறு பிளான் எதையாவது செய்வார்களா என பல வருடங்களாகத் தியேட்டர்காரர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.