பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. கோலமாவு கோகிலா, எல்கேஜி, டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் புதிய படம் 'லெக்பீஸ். இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளத்தை பெற்றுக் கொண்டு நடிக்க மறுத்து வருவதாக அந்த படத்தில் தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், 'லெக்பீஸ்' படத்தில் 10 நாள் நடிக்க ரெடின் கிங்ஸிலிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் 4 நாள் மட்டுமே நடித்த அவர் மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருவதாகவும், இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த தொகையை நஷ்ட ஈடாக மீட்டுத் தர வேண்டும் அல்லது நடித்து தர உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் ரெடின் கிங்ஸ்லி தரப்பு விளக்கத்தை கேட்டுள்ளனர்.