தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் அடுத்து இயக்கும் படம் அரியவன். இதில் ஈஷான், பிரணாலி என்ற புதுமுகங்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்பட பலர் நடிகிறார்கள். கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஜி.பி மாஸ் மீடியா தயாரிக்கிறது.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தனிமனிதனாக போராடும் ஹீரோவின் கதை. மாரிசெல்வத்தின் கதையை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாகி உள்ளது. அடுத்த மாதம் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து மாதவன் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மித்ரன்.