ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தான் நடித்து வருவதாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார் தமன்னா. அது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நான், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு கனவு போல் உள்ளது.
அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு முன்பு சைராவில் அவருடன் நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் இந்த போலா சங்கர் படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதோடு சிரஞ்சீவி உடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அதனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் பாடல் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.