ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வினீத் சீனிவாசன் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் வெளியானது. மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு சில காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ஒரு விழாவில் மலையாள நடிகர் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் நகைச்சுவை நடிகருமான இடவேள பாபு என்பவர் விமர்சித்து பேசியதாக ஒரு பரபரப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இடவேள பாலு வினீத் சீனிவாசன் குறித்தும் அவர் நடித்திருந்த உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ் படம் குறித்தும் நான் தவறாக எதுவும் பேசவில்லை. அந்த படம் மோசமான படம் என்றும் நான் கூறவில்லை. அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பெரியவர்கள் மட்டுமே அந்த படம் பார்க்கலாம் என்கிற விதமாக அந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் வினீத் சீனிவாசன் நடித்திருந்த படம் என்பதால் எல்லோரும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தனது மகனையும் அழைத்துக்கொண்டு வந்ததாக ஒரு வங்கி மேலாளர் என்னிடம் கூறினார். சென்சார் இந்த விஷயத்தில் கண்காணிக்க வேண்டும் என்று தான் நான் அந்த மேடையில் பேசினேன். ஆனால் நான் ஏதோ படம் குறித்து தவறாக பேசிவிட்டேன் என்பது போல அந்த செய்தி திரித்து வெளியாகிவிட்டது. ஆனாலும் அதன்பிறகு அந்த படத்திற்கு இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைத்தது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.