விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் |
பாகுபலி படங்கள் மூலம் இந்திய அளவிலான ஸ்டாராக உருவெடுத்துள்ளார் பிரபாஸ். தற்போது ஆதிபுருஷ், சலார், புராஜெக்ட் கே உள்ளிட்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் சக நடிகர்களுக்கு விருந்து கொடுப்பதை பிரபாஸ் வழக்கமாக கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இவரின் விருந்தோம்பலில் நனைந்துள்ளனர். தற்போது நடிகை தமன்னாவும் பிரபாஸின் விருந்தோம்பல் குறித்து சிலாகித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம். அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது. அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும்” என கூறியிருக்கிறார்.