சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பழக்கங்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. போதை பழக்கத்திலிருந்து தமிழகத்தை காக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்தை போதையின் பிடியில் இருந்து மீட்கவும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தொடங்கி வைத்தார். ஏராளமானோர் இந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் கையெழுத்திட்டார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார். இப்படி போதையற்ற தமிழ்நாடு இயக்கத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கையெழுத்திட்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.