ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி.ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை (தமிழ் பெண்ணை) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‛இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன்பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.