வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் தயாராகும் தொடர். அங்கு பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தியன் வெர்ஷனில் சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் உள்ளன.
இந்த தொடருக்காக குதிரையேற்ற பயிற்சி செய்த சமந்தா. சண்டை பயிற்சியும் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சண்டை காட்சியின்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. அந்த படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா “இதையெல்லாம் பார்த்து நான் அஞ்சப்போவது இல்லை.. எனது கையில் ஏற்பட்டுள்ள காயங்களை நான் ஆபரணமாக கருதுகிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் அதிரடி சண்டை காட்சியில் நடித்திருந்த சமந்தா. சமீபத்தில் வெளிவந்த 'யசோதா' படத்திலும் சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது அதிரடி ஆக்ஷனை தொடங்கி இருக்கிறார். அடுத்து குஷி படத்திலும் நடிக்க உள்ளார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் படம் வெளியாக உள்ளது.