எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை |
தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள பல ஹீரோக்கள் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் வேறு சில தொழில் முதலீடுகளையும் செய்து வருகிறார்கள். பிரபல முன்னணி நடிகரான மகேஷ்பாபு, ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஏற்கெனவே ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற 7 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.
அடுத்ததாக ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் டிரைவன் இன் தியேட்டர் ஒன்றை நடிகர்கள் வெங்கடேஷ், ராணா ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்க உள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் சுனில் நரங் அவர்களும் இதில் இணைகிறாராம். இது குறித்து அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தகவல்.
அந்த டிரைவ் இன் தியேட்டருக்கு 'எஎம்பி கிளாசிக்' எனப் பெயர் வைக்க உள்ளார்களாம். அழகான வடிவமைப்புடன் உருவாக உள்ள இந்தத் தியேட்டரை இந்த வருடத்திற்குள் திறக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.
சென்னையில் இதற்கு முன்பு பிரார்த்தனா என்ற ஒரே ஒரு டிரைவ் இன் தியேட்டர் இருந்தது. அதை தற்போது மூடி விட்டார்கள். அதே சமயம், திருச்சியில் தற்போது மூர்த்திஸ் டிரைவன் இன் என்ற தியேட்டர் கடந்த வருடம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சென்னையில் ஒரு டிரைவ் இன் தியேட்டர் கூட இல்லாதது சினிமா ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.