தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் சூர்யா இப்பொழுது பிஸியாக அவரது 42-வது படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா . இதனிடையே தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கு தயாரிப்பாளர் படங்களில் நடிப்பது டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய் (வாரிசு), தனுஷ் (வாத்தி), சிவகார்த்திகேயன் (பிரின்ஸ்) இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் சூர்யாவும் நேரடி தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் இவர் நடிக்க இருக்கும் இப்படத்தை சீதா ராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளாராம். இந்த படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள் என கூறப்படுகிறது . இப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் நானிக்கு கூறியுள்ளார். அவர்கள் வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டனர். இதனால் அந்த கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.