ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பென்னி தயாள், அண்மையில் சென்னை விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று அவரது தலையில் மோதியது. இதனால் வலி தாங்க முடியாமல் பென்னி தயாள் மேடையிலேயே சுருண்டு உட்கார்ந்தார். இதன் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கமளித்த பென்னி தயாள், 'ட்ரோனின் இறக்கை தலையின் பின்புறம் தாக்கிய போது தடுக்க முயன்றேன். அப்போது இறக்கை கைவிரல்களில் பட்டு காயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் புரொபஷ்னல் ட்ரோன் ஆப்ரேட்டர்களை அமர்த்துங்கள். அனைத்து கலைஞர்களும் ஒப்பந்தத்தின் போது ட்ரோன் நமது அருகில் நெருங்க முடியாததை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கலைஞர்கள், மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.