தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பென்னி தயாள், அண்மையில் சென்னை விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று அவரது தலையில் மோதியது. இதனால் வலி தாங்க முடியாமல் பென்னி தயாள் மேடையிலேயே சுருண்டு உட்கார்ந்தார். இதன் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கமளித்த பென்னி தயாள், 'ட்ரோனின் இறக்கை தலையின் பின்புறம் தாக்கிய போது தடுக்க முயன்றேன். அப்போது இறக்கை கைவிரல்களில் பட்டு காயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் புரொபஷ்னல் ட்ரோன் ஆப்ரேட்டர்களை அமர்த்துங்கள். அனைத்து கலைஞர்களும் ஒப்பந்தத்தின் போது ட்ரோன் நமது அருகில் நெருங்க முடியாததை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கலைஞர்கள், மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.