கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சமூக வலைத்தளங்களில் டுவிட்டரில்தான் சினிமா ரசிகர்களின் சண்டைகள் அதிகம் நடக்கிறது. அவை தரக்குறைவாகவும், அசிங்கமாகவும் கடந்த சில வருடங்களாக அத்துமீறி நடந்து வருகிறது. அதைப் பற்றி டுவிட்டர் நிறுவனம் கண்டு கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட நடிகர்களும் கவலைப்படுவதில்லை.
ஆனால், பொதுவெளியில் அவர்கள் டிரெண்டிங்கிற்காகப் பயன்படுத்தும் வார்த்தைகளால் டுவிட்டர் பக்கம் போகவே யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. நேற்று மாலை முதல் திடீரென ரஜினிகாந்தைத் தரக்குறைவாக விமர்சித்து ''செத்த பாம்பு ரஜினி'' என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு டிரெண்டிங் ஆரம்பமானது. அதை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்து வைத்தனர். அது இன்று காலை வரை போய்க் கொண்டிருக்கிறது.
பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் விஜய்யை விமர்சித்து, “செத்த அணில் குஞ்சு விஜய்” என டிரெண்டிங் செய்து வருகிறார்கள். அதோடு ரஜினி மீதான நெகட்டிவ்வான டிரெண்டிங்கிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “கோலிவுட் பிரைடு ரஜினி” என்றும் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
யார் அடுத்த சூப்பர் ஸ்டார் ? என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. அதனால், விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் இப்படி அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.