தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

‛பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தார் மாரி செல்வராஜ். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‛மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கியதால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார். தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன.
இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை' என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து விட்டார். இந்தபடமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் துருவ். மேலும் கபடி விளையாட்டு தொடர்பான படம் என்பதால் அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு, மூன்று மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.