சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது குணமாகி உள்ளார். இவர் நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் ஏப்.,14ல் வெளியாகிறது. இதனையடுத்து விஜய் தேவரகொண்டா உடன் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், 'சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும், நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்' என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.