ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து ஹிந்தியில் படங்களை இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக மாறியவர் ராம்கோபால் வர்மா. அவரது படங்கள் ரியலிஸ்டிக்காக இருக்கும் என்பதுடன் பல நேரங்களில் சர்ச்சைகளையும் கிளப்பும். இன்னொரு பக்கம் அவர் வெளியிடும் சோசியல் மீடியா பதிவுகளும் தங்களது பங்கிற்கு ஏதாவது சர்ச்சையை கிளப்புவதும் வழக்கம். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தன்னுடைய பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து தற்போது தான் படித்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றுள்ளார்.
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.