திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரபல பாலிவுட் காமெடி நடிகர் கியாலி சஹாரன். 'சிங் இஸ் எ கிங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அதோடு பல சமூக சேவைகளும் செய்து வருகிறவர். இவர் மீது தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
25 வயது இளம் பெண் ஒருவர் ராஜஸ்தானின் மானசரோவர் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் நடிகர் கியாலி சஹாரன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், அந்த ஓட்டலில் அழைக்கப்பட்ட பெண்களுக்கு தனித்தனி அறை எடுத்து கொடுத்து அங்கு இன்டர்வியூ என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அதில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டதாகவும், மாட்டிக் கொண்ட தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து கியாலி சஹாரன் மீது போலீசார் பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கியாலி சஹாரன் கைதாகலாம் என்று தெரிகிறது.