இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் 'கனெக்ட்' படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் லாபத்தை ஈட்டியது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா நேரடியாக பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தனிஒருவன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவின் 75வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தை நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை குறுகிய காலத்தில் தயாரித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெய் மற்றும் சத்யராஜுடன் ஏற்கனவே நயன்தாரா 'ராஜா ராணி' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.