தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் அக நக என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் பின்னணி இசைப் பணிகள் லண்டனில் உள்ள அபெய் ரோடு ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது . இது குறித்த தகவலை ஏ.ஆர். ரகுமான் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதோடு அங்கு மணிரத்னத்துடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். முதல்பாகத்தை விட இரண்டாம் பாக இசைப் பணிகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக லண்டனில் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை உலகதரத்தில் வழங்கி வருகிறார் ரஹ்மான்.