தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதனால் இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் கே.பாக்யராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் பார்த்திபன், நாசர், பிரசன்னனா, நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் படம் பற்றி பேசியதாவது : இந்த படம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கருவேலங்காட்டு அரசியலை பேசும் படம். கொடூரமான வெயிலில் கருவேலங்காட்டிலேயே படமாக்கினோம். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. சாந்தனு உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். இந்த படம் அவரது கேரியரில் முக்கியமானதான இருக்கும்.
நன்றாக நடிக்க தெரிந்த நடிகை வேண்டும் என்பற்காக ஆனந்தியை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். படத்தின் பட்ஜெட் நிர்ணயித்ததை விட அதிகமானது. அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். இராவணன் என்ற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறது என்றார்கள். அதை தாண்டி இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. என்றார்.