இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி படங்களில் நடித்தார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் படங்களில் நடித்ததார். தற்போது அவர் மீண்டும் தமிழில் 'பாபா பிளாக் ஷீப்' என்ற படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த டிராமாவாக உருவாகிறது.
‛‛இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமியை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கிறது என்றார் ராஜ்மோகன்.