தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார் சிவகார்த்திகேயன். அவரது 21 வது படமான இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது விஜய்யின் லியோ படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ள அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து அங்குள்ள வெப்பநிலை மற்றும் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏதுவான சூழல் ஆகியவை குறித்து கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் கூறும் தகவலை பொருத்தே சிவகார்த்திகேயனின் 21வது படப்பிடிப்பை உடனடியாக காஷ்மீரில் நடத்துவதா? இல்லை சற்று கால தாமதம் செய்து நடத்துவதா? என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.