ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. மேலும், யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், மயோசிட்டிஸ் பிரச்னை குறித்து ஒரு தகவல் தெரிவித்து இருக்கிறார். இன்னமும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்று தெரிவித்திருக்கும் சமந்தா, முன்பை விட எனது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் கூடிய சீக்கிரமே இந்த நோயின் பிடியிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.