தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் போட்டுள்ளார். அந்த டுவீட்டானது வைரலாகி பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதனையடுத்து மற்றொரு டுவீட்டை பதிவிட்டுள்ள பாலாஜி முருகதாஸ், 'தமிழ்நாட்டில் மதுவினால் என்னை போல் பல அநாதைகள் உருவாகியுள்ளனர். என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள். உங்களால் சமாளிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளார்.
பாலாஜி முருகதாஸின் இந்த டுவிட்டர் பதிவுகளை சிறுபிள்ளைத்தனம் என்றும் ஆர்வக்கோளாறு என்றும் அரசியல் வட்டாரத்தினர் விமர்சித்து வருகின்றனர்.