தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மதுபானங்களை குடிக்கும் அதிர்ச்சி செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வருவது தான். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
அதோடு,
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி!
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றிய பதிவே இது. அவர்களது பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை யாரும் கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கு என்றாலும், பெண்களின் உரிமை பணம் ஆண்களின் தவறான செயல்களுக்கு பலியாகக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அவரது இந்த பதிவுகளுக்கு வழக்கம் போல் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வெளியாகி வருகிறது.