இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இருந்து வருகிறது. 'வாரிசு' பட விழாவில் விஜய்யை சிலர் சூப்பர்ஸ்டார் என சொன்ன பிறகு அந்த சர்ச்சை அதிகமானது. அந்தப் படம் ஓடி முடிந்த பின்னும் இன்னமும் அவ்வப்போது அது புகைந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு '1947 ஆகஸ்ட் 16' பட டிரைலர் வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் உங்களிடம் ரஜினி சாயல் தெரிகிறதே என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு சிவகார்த்திகேயன், “கிட்டத்தட்ட 1000, 2000 மேடைகளில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி பண்ணியிருப்பேன். அதை நான் நன்றாகப் பண்ணுவேன்னும் சொல்வாங்க. அது எப்பவுமே என் மேல இருந்துட்டேயிருக்கும். அது பிளான் பண்ணிலாம் பண்றதில்ல. அது எப்பவுமே என்கிட்ட உண்டு, அது எனக்கு சந்தோஷம்தான்,” என்றார்.
சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வெளிவர உள்ள படத்தின் பெயர் 'மாவீரன்'. அப்பெயரில் ரஜினிகாந்த் நடித்து ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி உள்ளது. அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், தன்னிடம் ரஜினி சாயல் இருப்பது குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருப்பது மறைமுகமாக எதையோ சொல்ல வருவது போலவே உள்ளது.