தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபாஸ், கிர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் நடிக்கும் பான் இந்தியா படம் 'ஆதி புரூஷ்'. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து இதன் புரமோஷன் பணிகளை நாளை முதல் தொடங்குகிறார்கள். இதை முன்னிட்டு தயாரிப்பாளர் பூஷண் குமார் இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்து பணிகளை தொடங்கி உள்ளனர். வைஷ்ணவி தேவி கோயிலில் நடந்து வரும் சைத்ர நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட இவர்கள் படத்தின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
”வைஷ்ணவி தேவி எங்கள் குல தெய்வம். எந்த காரியத்தை தொடங்கினாலும் அவளை வணங்கி ஆசீர்வாதம் பெற்றே தொடங்குவோம். ஆதி புருஷ் படத்தின் பணிகளை அப்படியே தொடங்கி உள்ளோம். பெரும் வெற்றியை அவள் எங்களுக்கு தருவாள்” என்கிறார் தயாரிப்பாளர் பூஷண் குமார்.