ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த பல மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக அவர் உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளை சார்ந்த பல தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமாரும் , அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த தகவலை அதிமுகவினர் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை மறைவை ஒட்டி அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.