தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த பல மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக அவர் உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில் அரசியல் கட்சிகளை சார்ந்த பல தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமாரும் , அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தியிருக்கிறார். இதுகுறித்த தகவலை அதிமுகவினர் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை மறைவை ஒட்டி அவரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.