திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் குறித்த கதை என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்கவயல் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்து தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் தன் கலந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 29ம் தேதி நடந்தது. இதில் விக்ரம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவை முடித்த பின் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.