நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. திருமணம் முடிந்து குழந்தைக்கு தாயாகி உள்ள அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் நடிகையாக இருந்து தாயாகவும் மாறி இருக்கிறேன். உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்து விட்டதை வைத்தோ ஒரு மனிதரை மதிப்பீடு செய்வது அநாகரிகம். வெள்ளை முடியையும், தாயான பிறகு வயிற்றின் மீது ஏற்படும் கோடுகளையும் மறைக்கும் முயற்சியை நான் எப்போதும் செய்யவில்லை, பெண்கள் ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் இருக்கும் அனைத்து உணவு பிளானையும் அமல்படுத்தக்கூடாது. முதலில் நாம் நமது உடலோடு பேச வேண்டும். உடல் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டேன். என் அப்பா டிரை புரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். நானும் என் குழந்தைகளுக்கு அதையே ருசி காட்டினேன்.
நான் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்களும் அதே வழியை அனுசரிப்பார்கள். நாம் நொறுக்கு தீனியை விரும்பினால் அவர்களும் அந்த குப்பையோடு வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். பெண்கள் ஆரோக்கியத்தின் மீது குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.