ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் குழந்தை பிறப்பு பற்றி அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அது பற்றிய விசாரணை நடந்து எந்த விதி மீறலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பின் அந்த சர்ச்சை அடங்கியது.
தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் என்ன பெயர் வைத்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.