நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் குழந்தை பிறப்பு பற்றி அரசாங்கம் இயற்றிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் அது பற்றிய விசாரணை நடந்து எந்த விதி மீறலும் இல்லை என அறிவிக்கப்பட்ட பின் அந்த சர்ச்சை அடங்கியது.
தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் என்ன பெயர் வைத்தார்கள் என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. “உயிர், உலகம்” என்பதைக் குறிப்பிடும் வகையில், “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். இதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.