லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க போகிறார். இதை ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
இந்த படம் ஆக்சன் திரில்லர் கதையில் உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. பெரும்பாலும் காமெடி கலந்த கமர்சியல் கதைகளாகவே நடித்து வரும் சிவகார்த்திகேயன், காக்கிச்சட்டை படத்தில் ஆக்ஷன் கதையில் நடித்தார். இந்நிலையில் மீண்டும் அதிரடியான ஒரு ஆக்சன் கதையில் அவர் களம் இறங்குகிறார். அதோடு இதுவரை இல்லாத அளவுக்கு தனது கெட்டப்பையும் இந்த படத்திற்காக மாற்றப் போகிறாராம் சிவகார்த்திகேயன்.