2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மலையாளத்தில் நேரம், பிரேமம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்டு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தனது புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது புதிய படத்திற்கு தேவையான புதிய நடிகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக ஆடிசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்கான தகுதியாக நடிப்பு, பாட்டு, டான்ஸ், ரீல்ஸ் வீடியோ, பெயிண்டிங் என எந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் இது தமிழில் உருவாகும் படம் என்றாலும் எந்த மொழியை சேர்ந்தவர்களும், அவ்வளவு ஏன் 7 கண்டத்தில் உள்ளவர்களும் கூட இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இதற்கு முன்னதாக அவர் நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்திற்கு தந்தவர் என்பதால் இந்த புதிய படத்திலும் கதாநாயகிகள் மற்றும் புதிய நடிகர்களையும் நிச்சயம் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.