ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தற்போது திருமணமானபின் செலக்டிவான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்திய மாதங்களில் ஹிந்தியில் அவர் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் கன்னடத்தில் அவர் நடித்த கப்ஜா ஆகிய படங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ஒரு மிகப்பெரிய கூண்டில் பல வெளிநாட்டு பறவைகளை அடைத்து வைத்திருப்பது குறித்த வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.
இது குறித்து அவர் கூறும்போது, “நீங்கள் ஒரு பறவைகளின் காதலனாக இருந்தால் அவற்றை இப்படி ஒரு கூண்டில் அடைத்து வைக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பறவைகள் என்றாலே அவை சுதந்திரமானவை. இவ்வளவு நிறைய பறவைகள் எதற்காக ஒரு சிறிய கூட்டில்..? உங்களுக்கு பொறுப்பில்லையா மனிதர்களே? இது சட்டபூர்வமானது என்றாலும் சரிதானா? அவை ஒரு சிறிய கூண்டில் நாள் முழுவதும் அடைத்து வைத்திருக்கப்படுகின்றதே ஏன்? யாரோ சில விருந்தினர்கள் இதை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான்.. பறவைகள் அந்த கூண்டை உடைத்து பறக்க முயற்சிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்று தனது கண்டனத்தையும் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரேயா.
இது குறித்து ஒரு சிலர் வெளியிட்டுள்ள கமெண்ட்டுகளில், இந்த பறவைகள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் இவற்றை இந்திய சூழலில் தனியாக விட்டால் அவற்றால் உயிர் வாழ முடியாது என்றும், இந்த செயலுக்கு ஆதரவளிக்கும் விதமாக கூறி வந்தனர்.
இதுகுறித்து மீண்டும் ஸ்ரேயா கூறும்போது, “எதற்காக வெளிநாட்டில் இருந்து பறவைகளை இங்கே கொண்டு வந்து இப்படி கூண்டில் அடைக்க வேண்டும்..? பறவைகள் வர்த்தகத்தை முதலில் நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.