சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் நடிப்பில் இறைவன், சைரன் திரைப்படம் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.