இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை |
வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில்..நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் குலதெய்வ வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் குலதெய்வ கோயிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்த நடிகை நயன்தாரா வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்கு உயிர்ருத்ரோநீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில் தனது குலதெய்வ கோயிலான வழுத்தூர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் பொங்கல் வைத்து, சாமிக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த உடனே இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் குவிந்து விட்டனர். அய்யம்பேட்டை போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.