சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடி எனப் பேசப்பட்ட ஒரு ஜோடி. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தேவரகொண்டா எந்த ஒரு வாழ்த்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இருவரும் பிரிந்ததே அதற்குக் காரணம் என டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
ராஷ்மிகா சமீபகாலமாக மற்றொரு தெலுங்கு நடிகரான பெல்லம்கொண்டா சீனிவாசுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த மாதம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொன்டாவுக்கு பிறந்தநாள் வந்த போது அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் ராஷ்மிகா. ஆனால், நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு ஆனந்த் கூட வாழ்த்து சொல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தற்போது 'குஷி' படத்திலும், ராஷ்மிகா 'புஷ்பா 2' படத்திலும் நடித்து வருகிறார்கள்.