இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, முக்கிய வேடங்களில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் மடோன் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது மாவீரன் படத்தை பற்றி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி "சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 7 நாட்கள் மட்டுமே மற்ற நடிகர்களின் காட்சி படமாக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும், தனக்கும், படக்குழுவிற்கும் மிகவும் பிடித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.