நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை கொண்டு வர விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் சசி இயக்க மறுத்துவிடவே தானே இயக்க முடிவு செய்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு தடைகோரி மாங்காடு மூவீஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நான் தயாரித்த 'ஆய்வுகூடம்' என்ற படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.