தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகத்தை கொண்டு வர விஜய் ஆண்டனி விரும்பினார். ஆனால் சசி இயக்க மறுத்துவிடவே தானே இயக்க முடிவு செய்தார். தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு தடைகோரி மாங்காடு மூவீஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “நான் தயாரித்த 'ஆய்வுகூடம்' என்ற படத்தின் கருவையும், வசனத்தையும் பயன்படுத்தி பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்த பிறகே படத்தை வெளியிட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 12ம் தேதிக்கு தள்ளி வைத்தது.