எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல நடிகரான கிச்சா சுதீப் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். அதையடுத்து நடந்த விசாரணையின் போது அந்த கார் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பது தெரிவந்துள்ளது. அதையடுத்து அந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.