ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளது. அடுத்தபடியாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார். இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 170 வது படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. அதோடு லால் சலாம் படத்தில் நடித்து வரும்போதே தனது 170 வது படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கிறார்.