தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அழகி போட்டிகளில் டைட்டில் வென்ற ஷாலி நிவேகாஸ் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பின்னர் விளம்பர படங்களிலும், குறும்படங்களிலும் நடித்தவர் சமீபத்தில வெளிவந்த 'செங்களம்' வெப் தொடரில், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவை நினைவுபடுத்தும் நாச்சியார் என்ற கேரக்டரில் நடித்த பிரபலமானார். தற்போது அவர் 'பேரன்பும் பெருங்கோபமும்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் 3 கால கட்ட கதையில் 3 விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.
துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா உதவியாளர் சிவபிரகாஷ் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சிவபிரகாஷ் கூறியதாவது: சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன். வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த படம். 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. என்றார்.