இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் சூது கவ்வும். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்த இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பாக சி. வி. குமார் தயாரித்திருந்தார். வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு போஸ்டர் உடன் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சூது கவ்வும் 2 என்ற தலைப்பிற்கு கீழே நாடும் நாட்டு மக்களும் என்ற துணை தலைப்பு போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்குகிறார். மேலும் முதல்பாகத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடித்த நிலையில் தற்போது இரண்டாம் பக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கப் போகிறார். அவருடன் கருணாகரனும் நடிக்க உள்ளார்.