ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் 'சைத்ரா'. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஜெனித்குமார் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. இதில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. பேய் படம் என்றாலும் வழக்கமான காட்சிகள் இன்றி புதுமையான முறையில் இதனை படமாக்கி உள்ளதோடு. ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் படம் பேசுகிறது. பேய் இருக்கிறதா? இல்லையா என்ற விவாவத்தையும் முன் வைக்கிறது. என்றார்.