இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த விஜய் வாரிசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நேரடியாக என்ட்ரி கொடுத்தார். வம்சி இயக்கிய இந்த படம் வாரிசுடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சமீபத்தில் கடந்தபோன பொங்கலுக்கு வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கோபி சந்தை பொறுத்தவரை ஹீரோக்களை மாஸாக காட்டக் கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.