இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்கிற பீரியட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது தற்காலிகமாக இந்த படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் வந்து கண்டு களித்தார் தனுஷ். அவருடன் அவரது இளைய மகன் லிங்காவும் வந்திருந்தார். அதேசமயம் உள்ளூரில் இருந்த நடிகர் சிவராஜ்குமாரும் இந்த கிரிக்கெட் போட்டியை காண வந்தவர், நடிகர் தனுஷுடன் அமர்ந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார்