இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரானவர் மணிரத்னம். 1983ம் ஆண்டில் 'பல்லவி அனு பல்லவி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அதிலிருந்து மணிரத்னம் இயக்கிய 'உணரு' மலையாளப் படம், பின்னர் “பகல் நிலவு, இதயக்கோயில், மௌனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி, தளபதி” ஆகிய படங்கள் வரையும், தெலுங்கில் 'கீதாஞ்சலி' படம் என அனைத்துப் படங்களுக்கும் இசை இளையராஜா தான்.
பாலசந்தர் தயாரிப்பில், மணிரத்னம் இயக்க 1992ல் வெளிவந்த 'ரோஜா' படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு முன்பாக பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் பிரச்சினை ஆனதால், அந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பதை பாலசந்தர் விரும்பவில்லை. எனவே, விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்த ஏஆர் ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணி நிலைத்து நிற்கிறது.
இருந்தாலும் மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக 'இதயக் கோயில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தெலுங்கில் 'கீதாஞ்சலி,' அதன் தமிழ் டப்பிங்கான 'இதயத்தை திருடாதே', அஞ்சலி, தளபதி” ஆகிய படங்களின் பாடல்கள், பின்னணி இசை இன்றும் இசை ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் இணையாதா என அந்தக் கால ரசிகர்கள் ஏங்கித்தான் போயிருக்கிறார்கள். 'பொன்னியின் செல்வன்' படம் வெளிவந்த போது அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று விவாதித்தவர்களும் உண்டு.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மணிரத்னத்திடம் “இளையராஜாவை மிஸ் செய்கிறீர்களா ?,” என்று கேட்டதற்கு, “ஆமாம், அவர் ஒரு ஜீனியஸ். என் முதல் படத்திலிருந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்தார். அவரால் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு படத்திலும் அவரையும், பி.சி.ஸ்ரீராமையும் மிஸ் செய்கிறேன். அந்தந்த படங்களின் கதை, சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாறுகிறது,” என பதிலளித்தார்.
அந்த எவர்க்ரீன் கூட்டணி மீண்டும் இணையுமா என்பதுதான் பல ரசிகர்களின் விருப்பம். இளையராஜவும், மணிரத்னமும் இணைந்து மனம் வைப்பார்களா ?.