பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
நடிகர் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிப்பதை விட தமிழ், தெலுங்கில் தான் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் ரவிதேஜா, விஜய் தேவரகொண்டா, பிரபாஸ் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயராம். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜெயராம் விரைவில் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாக ரிலீஸூக்காக தயாராகி வருகிறார்,
இந்த நிலையில் தற்போது தனது மனைவி பார்வதியுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் ஜெயராம். சித்திரை விஷுவை முன்னிட்டு அவர் சபரிமலை தரிசனத்திற்காக சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் கடந்த செப்டம்பரில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பாக இதேபோன்று நடிகர் ஜெயம் ரவியுடன் அவர் சபரிமலை சென்று வழிபட்டு வந்தார் என்பதால், இந்த முறையும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றிக்காக அவர் சபரிமலை சென்று வந்துள்ளதாகவே தெரிகிறது